அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது மனைவியுடன் சென்று பொதுமக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கை பதிவு செய்தார். அதன் பின்னர் பேசிய அவர், “தமிழகத்தின் 39 தொகுதிகளுக்கும் பிரசாரத்திற்காக சென்றுள்ளேன். தேர்தலில் தி.மு.க., மற்றும் ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெறும் என்பதே தமிழக வாக்காளர்களின் மனநிலையாக உள்ளது.” என்றார்.