Home இந்தியா செய்திகள் ‘கூட்டணி கட்சியின் பாலியல் குற்றவாளியை ஏன் தப்ப விட்டீர்கள்?’ மோடிக்கு பிரியங்கா கேள்வி

‘கூட்டணி கட்சியின் பாலியல் குற்றவாளியை ஏன் தப்ப விட்டீர்கள்?’ மோடிக்கு பிரியங்கா கேள்வி

by admin

கர்நாடகத்தின் ஹாசன் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணாவின் சர்ச்சை வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பேசுபொருளாக மாறின. இந்த விவகாரம் தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

அதேநேரம், குற்றம் தொடர்பாக விசாரிப்பதற்காக கர்நாடக அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்துள்ளது. எதிர்கட்சியினர் இந்த விவகாரத்தை பெரிய ஆயுதமாக மாற்றி உபயோகித்து வருகிறார்கள்.

இந்நிலையில், அசாமின் துப்ரியில் தேர்தல் பேரணியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பேசியதாவது:-

“கர்நாடகத்தில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், ஆனால் பாஜகவினர் பெண்கள் பாதுகாப்பு பற்றி பேசுகிறார்கள். பாலியல் குற்றச்சா ட்டுக்கு ஆளான பிரஜ்வால் ரேவண்ணா இந்தியாவை விட்டு வெளியேறுவதை பிரதமர் மோடி தடுக்கவில்லை.

பிரதமர் மோடி சாதாரண மக்களின் யதார்த்தத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறார். அதனால் மக்கள் படும் துயரம் அவருக்கு புரியவில்லை. நாட்டில் வேலையின்மை விகிதம் உச்சம் தொட்டுள்ளது. 70 கோடி பேர் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் அதை நிரப்புவோம். பாஜக மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy