தமிழகத்துக்கு முதல்முறையாக வெயிலுக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை விடுத்துள்ளது.
ஏற்கெனவே வெப்ப அலை வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களுக்கு தீவிர வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திருச்சி, கோவை, திருப்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழக வட மாவட்டங்களில் சில பகுதிகளில் 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப அலை வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.