Home இலங்கை செய்திகள் உடவலவயில் வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

உடவலவயில் வீடு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!

by admin

உடவலவ பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து தீக் காயங்களுடன் ஒருவரின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளது.

உடவலவ பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் தனது வீட்டிற்கு அருகில் கடையொன்றை நடத்தி வரும் நிலையில் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது வீட்டுக்குச் சென்று தீக்குளித்துள்ளதாக உயிரிழந்தவரது மனைவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் உடவலவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy