கோவையில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடி ஒன்றில் 830 பேரின் ஓட்டுகள் காணவில்லை எனக்கூறி பா.ஜ.வினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
கோவை கவுண்டம்பாளையம் பிஎன்டி காலனி பகுதியில் உள்ள அங்கப்பா பள்ளி ஓட்டுச்சாவடியில் 830 பேரின் ஓட்டுக்கள் காணவில்லை என புகார் எழுந்துள்ளது. கடந்த உள்ளாட்சி தேர்தலில், 1353 பேர் ஓட்டளித்த நிலையில், தற்போது 523 பேரின் பெயர்கள் மட்டுமே உள்ளன. எஞ்சிய 830 வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. அவர்களையும் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி பா.ஜ.,வினர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.