Home கனடா செய்திகள் கனடா வாழ் இலங்கையர்கள் மத்தியில் இலங்கை தேசிய மக்கள் சக்தி கட்சின் அநுர திசாநாயக்க உரையாற்றுகின்றார்

கனடா வாழ் இலங்கையர்கள் மத்தியில் இலங்கை தேசிய மக்கள் சக்தி கட்சின் அநுர திசாநாயக்க உரையாற்றுகின்றார்

by admin

இலங்கையின் தென்னிலங்கை அரசியலில் பலமிக்க ஒரு எதிர்க்கட்சியாகவும் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ராஜபக்ச சகோதரர்கள் ஆகியோரின் அரசியல் செல்வாக்கை முறியடிக்கும் வகையில் தீவிரமாக செயற்பட்டு வருபவரும் அண்மையில் இந்தியா மற்றும் அமெரிக்க அரசுகளினால் அழைக்கப்பெற்று கலந்துரையாடல்களை நடத்தியவருமான அநுர திசாநாயக்கா அவர்கள் கனடாவிற்கு வந்துள்ளார்.

கனடா வாழ் இலங்கையர்கள் மத்தியில் இலங்கை தேசிய மக்கள் சக்தி கட்சின் அநுர திசாநாயக்க அவர்கள் எதிர்வரும் 23ம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு ரொறன்ரொ மாநகரில் உள்ள ,Toronto Pavilion- 190- Railside Road, North York மண்டபத்தில் இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட மக்கள் மத்தியில் ‘தீர்வு நோக்கிய மக்கள் சத்தியை கட்டியெழுப்ப’ என்னும் கருப்பொருளில் உரையாற்றவுள்ளார்.

மேற்படி பொதுக்கூட்டத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம் தொடர்பான விபரங்களுக்கு:- 647 210 8771 அல்லது 647 767 4781 ஆகிய இலக்கங்களை அழைக்கவும்

இங்கே காணப்படும் படத்தில் நேற்று வியாழக்கிழமை காலை அநுர திசாநாயக்க அவர்கள் ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கியபோது ஆதரவாளர்கள் அவரை வரவேற்பதைக் காணலாம்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy