Home இந்தியா செய்திகள் மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு அறிவிப்பு!

by admin

மணிப்பூரில் வன்முறை நடந்த 6 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 30ஆம் தேதி மறு வாக்குப் பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதைதொடர்ந்து ஏப்.26ம் தேதி 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த, 88 தொகுதிகளில் இரண்டாம் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மணிப்பூரின் வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவின் போது பல வன்முறை சம்பவங்கள் பதிவாகியதால், மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னதாக, ஏப்ரல் 22 ஆம் தேதி உள் மணிப்பூர் தொகுதியின் 11 வாக்குச் சாவடிகளில் தேர்தல் அதிகாரிகள் மறு வாக்குப்பதிவை நடத்தினர். இதையடுத்து, உக்ருல், ஷங்ஷாக், சிங்காய். கரோங்க, ஒயினாம் உள்ளிட்ட 6 வாக்குச்சாவடிகளில் வரும் 30ம் தேதி மறு வாக்கப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy