இங்கிலாந்திற்கு எதிரான டி20 தொடருக்கு முன்பாக இலங்கை அணிக்கு மிகப்பெரிய இரட்டைப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
நட்சத்திர வீரர் குசல் மெண்டிஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பினுர பெர்னாண்டோ ஆகியோர் காயங்கள் காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளனர்.
எல்.பி.எல் தொடரின் போது குசல் மெண்டிஸுக்கு வலது தொடை தசைப் பகுதியில் காயமும், பினுர பெர்னாண்டோவுக்கு முதுகில் காயமும் ஏற்பட்டது.
தீவிர சிகிச்சையில் உள்ள இருவரும் இன்னும் குணமடையாததால் இந்தத் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
இதையடுத்து, காயமடைந்த குசல் மெண்டிஸுக்குப் பதிலாக பவன் ரத்நாயக்காவும், பினுர பெர்னாண்டோவுக்குப் பதிலாக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்காவும் இலங்கை அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணியை சரித் அசலங்க வழிநடத்தவுள்ளார்.


