நடிகர் விஷாலின் ரத்னம் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் திணறி வருகிறது. இதைத் தொடர்ந்து, விஷால் துப்பறிவாளன் – 2 திரைப்படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இதற்கான, அறிவிப்பும் வெளியானது. ஆனால், விஷால் இயக்குநர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் நடிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
முத்தையா – விஷால் கூட்டணியில் உருவான மருது திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்று அசத்தியது.
இந்த நிலையில், இக்கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.