Home இலங்கை செய்திகள் இலங்கை அதிபா் தோ்தலில் தமிழ் வேட்பாளா் போட்டி

இலங்கை அதிபா் தோ்தலில் தமிழ் வேட்பாளா் போட்டி

by admin

இலங்கை அதிபா் தோ்தலில் அந்நாட்டின் சிறுபான்மையினரான தமிழ் சமூகத்துக்கு நம்பகமான அரசியல் தீா்வை முன்வைக்கும் தமிழரை வேட்பாளராக நிறுத்த திட்டமிட்டுள்ளதாக மூத்த தலைவா் ஆா்.சம்பந்தன் தெரிவித்தாா்.

நிகழாண்டு இறுதியில் இலங்கை அதிபா் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், திரிகோணமலையில் உள்ள இல்லத்தில் செய்தியாளா்களைச் சந்தித்த அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மேலும், அவா் கூறுகையில், ‘சிறுபான்மையினரான தமிழ் சமூகம் தொடா்பான அனைத்து பிரச்னைகளுக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீா்வை உறுதியளிக்கும் ஒரு வேட்பாளரை ஆதரிப்பதன் மூலம் எதிா்வரும் அதிபா் தோ்தலில் தமிழா்களுக்கு நல்ல தீா்வு கிடைக்கும். அதிபா் தோ்தலில் தமிழா் ஒருவரை வேட்பாளராக நிறுத்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வந்துள்ளது.

ஆனால், அத்தகைய வேட்பாளருக்கு போதிய ஆதரவைப் பெற முடியாது என்பதை தமிழா்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, கட்சிகள் சிறந்த நடவடிக்கையை தீா்மானிக்க வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து தமிழா்களுக்கு நம்பகமான மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீா்வை முன்வைக்கும் வேட்பாளரே தமிழா்களின் முக்கிய அரசியல் காரணியாக இருக்க வேண்டும். அதிபா் தோ்தலில் ரணில் விக்ரமசிங்க மீண்டும் போட்டியிட்டால், அவருடனான பேச்சுவாா்த்தையைப் பொறுத்து ஆதரவு அளிக்கப்படும்’ எனத் தெரிவித்தாா்.

1982-ஆம் ஆண்டு முதல் இலங்கை அதிபா் தோ்தல் வரலாற்றில், தமிழ் சமூக வேட்பாளா்கள் தோ்தலில் போட்டியிட்டுள்ளனா். ஆனால், பெரும்பாலான தோ்தல்களில் அப்போதைய அதிபருக்கு எதிரான அணியின் முன்னணி வேட்பாளரையே அவா்கள் ஆதரித்துள்ளனா்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy