Home இலங்கை செய்திகள் போதைப்பொருள் விநியோகம் செய்த உடல்பிடிப்பு சிகிச்சை நிபுணர் கைது!

போதைப்பொருள் விநியோகம் செய்த உடல்பிடிப்பு சிகிச்சை நிபுணர் கைது!

by admin

பல பிரதேசங்களில் ஐஸ் போதைப்பொருளை விநியோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையின் உடல் பிடிப்பு சிகிச்சை நிபுணர் 4 கிராம் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் தங்காலை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக தங்காலை பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .

கைதானவர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் உடல்பிடிப்பு வைத்தியராக கடமையாற்றி வரும் சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தங்காலை ஊழல் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர் .

இவர் ஹம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, சூரியவெவ உள்ளிட்ட பிரதேசங்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகம் செய்துள்ளதுடன் சந்தேக நபர் சில காலமாக ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் தற்காலிகமாகத் தங்கியிருந்து இந்த போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது .

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy