Home உலக செய்திகள் ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

ஒலிச்சித்திரங்களாக மாற்றப்படும் ஹாரி பாட்டர் புத்தகங்கள்!

by admin

90-கள் மற்றும் 2000-த்தின் தொடக்கத்தில் வளர்ந்த குழந்தைகளை பாதித்த புனைவு கதாபாத்திரங்களில் முதன்மையானது ஹாரி பாட்டர்.

புத்தகங்களாகவும் படங்களாகவும் வெளியாகி கோடிக்கணக்கான பிரதிகள்/ காட்சிகள் விற்பனையான எழுத்தாளர் ஜே.கே.ரெளலிங்கின் ஹாரி பாட்டர் உலகை மையப்படுத்திய 7 புத்தகங்களும் ஒலி வடிவச் சித்திரங்களாக மாற்றப்படவுள்ளன.

அமேசான் நிறுவனத்தின் ஆடிபிள் மற்றும் பாட்டர்மோர் பப்ளிஷிங் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த ஒலிச்சித்திரத் தொடர் 2025-ம் ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.

100-க்கும் அதிகமான நடிகர்களின் குரல்கள் வழியாக துல்லியமான ஒலியமைப்பு, இசை உடன் ஹாரி பாட்டர் கதைகள் ஒலிவடிவில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படவுள்ளன.

ஆங்கிலத்தில் 1999-ல் முதன்முதலாக ஹாரி பாட்டர் புத்தகம் ஒலிவடிவில் உருவாக்கப்பட்டது. ஒரு குரல் ஒலிப்புத்தகமாக அது உருவானது.

2015-ல் ஆடிபிள் அதனை தனது தளத்தில் வெளியிட்டது. அதுமுதல் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மணி நேரங்கள் அந்த ஒலிப்புத்தகம் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy