Home உலக செய்திகள் “இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது” – இஸ்ரேல்–ஈரான் மோதல் குறித்து ஐநா பொதுச் செயலாளர் கருத்து!

“இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது” – இஸ்ரேல்–ஈரான் மோதல் குறித்து ஐநா பொதுச் செயலாளர் கருத்து!

by admin

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கும் நிலையில், இன்னொரு போரை இந்த உலகம் தாங்காது என்று ஐநா பொதுச் செயலாளர் அச்சம் தெரிவித்துள்ளார்.

காசா முனையை நிர்வகித்துவரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இதையடுத்து ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகள் 100க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளது. எஞ்சிய பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. அதேவேளை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது போர் அறிவித்து காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 33 ஆயிரத்து 634 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குகரையில் ஏற்பட்ட மோதலில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அதிகாலை இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலை ஈரான் தொடங்கியுள்ளது. இஸ்ரேலை நோக்கி ஏராளமான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகளை ஈரான் ஏவியுள்ளது. ஜெருசலேம் நகரின் சில இடங்களில் பயங்கர சத்தங்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஐநா சபையும் தனது கவலையை தெரிவித்துள்ளது. ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியா குட்டெரஸ் இது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தி உள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருப்பதை தான் கண்டிப்பதாகவும், இந்த தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தவதாகவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இன்னொரு போரை அந்த பிராந்தியமோ, உலகமோ தாங்காது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy