Home உலக செய்திகள் சிட்னி வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து – 6 பேர் பலி

சிட்னி வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து – 6 பேர் பலி

by admin

ஆஸி.,யின் சிட்னி நகரில் உள்ள வணிக வளாகத்தில் கத்திக்குத்து மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் குழந்தை உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர். குற்றவாளியை காவல்துறை சுட்டுக் கொன்றதாக தெரியவந்துள்ளது. ஆஸி., நேரப்படி, மாலை 4 மணி நிலவரப்படி போண்டி சந்திப்பு பகுதியில் உள்ள வெஸ்ட்பீல்ட் வணிக வளாகத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதாகவும், பலர் கத்தியால் குத்தப்பட்டதாகவும் போலீசார் கூறியுள்ளனர்.

வணிக வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர், அங்கிருந்த கடைக்காரர்களை சராமரியாக கத்தியால் குத்தி உள்ளார். அங்கிருந்தவர்களையும் குத்தி உள்ளார். இச்சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அதில், 9 மாத கைக்குழந்தை மற்றும் தாயாரும் அடக்கம். தகவல் அறிந்து வந்த காவல்துறை மர்ம நபரை சுட்டுக் கொன்றதாக அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன. இதனையடுத்து வணிக வளாகத்தில் இருந்த பலர் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறினர். அங்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ள காவல்துறை அப்பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்

Related Posts

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy