வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் ஊடாக வழங்கப்படும் மின்சாரக் கட்டண ஒதுக்கீடு போதுமானதாக இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், பாடசாலைகளின் தேவைகளை கருத்திற்கொண்டு அடுத்த ஆண்டு முதல் அந்த ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் சாதகமாகப் பரிசீலிக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (04) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றபோதே ஆளுநர் இதனைத் தெரிவித்துள்ளார்.


