இஸ்ரோவின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05-ஐ சுமந்த GSLV-F17 ராக்கெட் இன்று (04) அதிகாலை 2.55 மணிக்கு சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
51.7 மீட்டர் உயரமுள்ள இந்த ராக்கெட், மழையையும் பொருட்படுத்தாமல் திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.
மல்டி-ஸ்பெக்ட்ரல் மற்றும் ஹைப்பர்-ஸ்பெக்ட்ரல் கேமராக்களைக் கொண்ட EOS-05, இந்திய நிலப்பரப்பு மற்றும் எல்லைப் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து, பாதுகாப்பு அமைப்புகளுக்கு முக்கிய தரவுகளை வழங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.


