Wednesday, September 9, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்'டாக்ஸிக்' படத்துக்கு புது சிக்கல்

‘டாக்ஸிக்’ படத்துக்கு புது சிக்கல்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மினி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

படத்தில் இடம்பெற்றுள்ள அதிகப்படியான வன்முறை மற்றும் ஆபாசக் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக படம் எதிர்பார்த்த அளவிலான வசூலைப் பெறவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே திரையரங்குகளில் குறைந்த வசூலைப் பெற்று நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது ‘டாக்ஸிக்’ படத்துக்கு மேலும் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஓ.டி.டி. உரிமத்தில் ஏற்பட்ட பின்னடைவு

‘டாக்ஸிக்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே, அதன் ஓ.டி.டி. உரிமத்தைப் பெற சில நிறுவனங்கள் சுமார் ரூ.150 கோடி வரை வழங்க முன்வந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், தயாரிப்பு தரப்பு ரூ.200 கோடி வரை எதிர்பார்த்ததாகவும், இதனால் ஓ.டி.டி. உரிமம் தொடர்பான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், படம் வெளியான பின்னர் கிடைத்த விமர்சனங்கள் மற்றும் வசூல் நிலவரம் காரணமாக, தற்போது ஓ.டி.டி. உரிமத்துக்கு ரூ.30 கோடி முதல் ரூ.35 கோடி வரை மட்டுமே வழங்க சில நிறுவனங்கள் முன்வருவதாக கூறப்படுகிறது.

ரூ.200 கோடி வரை எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதைவிட பல மடங்கு குறைவான தொகை பேசப்படுவதாக வெளியாகியுள்ள தகவல், ‘டாக்ஸிக்’ படக்குழுவுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், இந்த தகவல் தொடர்பாக படக்குழு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments