டிட்வா சூறாவளியால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்த வீட்டு வாடகை கொடுப்பனவை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


