சமூக வலைத்தளங்களில் தங்களுக்குப் பிடித்தமான உள்ளடக்கங்களைப் பயனர்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கும் வகையிலான புதிய சட்ட வரைவை அவுஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ளது.
இதன் மூலம், சமூக வலைத்தளங்களின் அல்காரிதம்கள் (Algorithm) பரிந்துரைக்கும் பதிவுகளைப் பார்ப்பதா அல்லது தாம் பின்தொடரும் கணக்குகளிலிருந்து வெளியிடப்படும் பதிவுகளை மட்டும் பார்ப்பதா என்பதை பயனர்களே தீர்மானிக்க முடியும்.
பயனர்களுக்கு சமூக வலைத்தள உள்ளடக்கத் தெரிவில் அதிக கட்டுப்பாட்டை வழங்கும் நோக்கில் இந்த சட்ட வரைவு முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறும் சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.743.48 கோடி வரை அபராதம் விதிக்கப்படலாம் என அவுஸ்திரேலிய அரசு எச்சரித்துள்ளது.


