இலங்கை டிட்வா புயலின் தாக்கத்திலிருந்து இன்னும் மீளாதநிலையில், நாட்டில் நிலவும் வடகீழ் பருவபெயர்ச்சி காரணமாக டிசம்பர் 9, 10 ,11 ஆம் திகதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்க கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் போது காற்றின் வேகம் அதிகரிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சில பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வடக்கு- கிழக்கு பருவ பெயரச்சியால் கிடைக்கும் மழையினால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிரேஸ்ட பேராசிரியர்(புவியியல் துறை) எஸ்.அன்ரனி நோர்பேட் தெரிவித்தார்.
ஆனால் மலையக மற்றும் தென் பகுதிகளில் இடி முழக்கம் தீவிரமாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.


