தலைமன்னார் ஸ்டேசன் பகுதியில், கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் உயிரிழந்த சம்பவம், இன்று புதன்கிழமை காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய குறித்த பெண், தலைமன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட உயிரிழந்த பெண்ணின் கணவர், தலைமன்னார் ஸ்டேசன் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


