கொழும்பு கொச்சிக்கடை, புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு இன்று (13) விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இவ்விழாவிற்கு இணையாக, இன்று பிற்பகல் 02.30 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலான காலப்பகுதியில் திருச்சொரூப பவனி கடற்கரை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதிகளில் வீதி உலா வரவுள்ளது.


