கிழக்கு காசா நகரின் Zeitoun பகுதியில், இஸ்ரேலியத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கான இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
குரல்: கடந்த மூன்று வருடங்களாக இந்த Zeitoun பகுதி, இஸ்ரேலிய ராணுவத்தின் தொடர் தாக்குதல்களுக்கு இலக்காகி வருகிறது.
வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டதைத் தொடர்ந்து தஞ்சமடைந்த மக்கள் மீதும் மீண்டும் மீண்டும் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதில் தற்போதைய நிலவரப்படி, இடிபாடுகளுக்குள் புதையுண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.
அங்கு மீட்டெடுக்கப்பட்ட உடல்களின் எச்சங்களில் பெரும்பாலானவை பிஞ்சு குழந்தைகளின் உடல்கள் தான் என சிவில் பாதுகாப்பு அதிகாரி வேதனையுடன் உறுதிப்படுத்தியுள்ளார்.


