Sunday, September 6, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஹெரோயினுடன் சிக்கிய சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக தகவல்

ஹெரோயினுடன் சிக்கிய சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக தகவல்

மாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.

நேற்றுமாத்தறையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் குறித்து மேலும் பல தகவல்கள் தெரியவந்துள்ளன.

நேற்று (05) மாத்தறை, வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, 1 கிலோகிராம் 9 கிராம் மற்றும் 205 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற இரண்டு சந்தேகநபர்களை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாத்தறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 25 வயதுடைய மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தற்போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், ஒரு சந்தேகநபர் தங்கியிருந்த அறையிலிருந்து ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, 56 டி-56 ரக தோட்டாக்கள் மற்றும் 47 பிஸ்டல் தோட்டாக்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (05) மாத்தறை, வெல்லமுல்ல பகுதியில் விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்தத் தகவலுக்கு அமைய சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, 1 கிலோகிராம் 9 கிராம் மற்றும் 205 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற இரண்டு சந்தேகநபர்களை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் கைது செய்தனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளும் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மாத்தறை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 24 மற்றும் 25 வயதுடைய மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தற்போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையில், ஒரு சந்தேகநபர் தங்கியிருந்த அறையிலிருந்து ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, 56 டி-56 ரக தோட்டாக்கள் மற்றும் 47 பிஸ்டல் தோட்டாக்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments