பூனகரி போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கேரதீவு பகுதியில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 48 கிலோ 400 கிராம் கேரளா கஞ்சாவுடன் வவுனியாவை சேர்ந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறப்பு அதிரடி படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக வீதி சோதனை செய்யப்பட்ட போது சந்தேகத்திற்கு இடமான முறையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பூநகரி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பூநகரி போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



