Sunday, June 7, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நான்கு பணயக்கைதிகளின் உடல்களை விடுவித்துள்ள ஹமாஸ்!

நான்கு பணயக்கைதிகளின் உடல்களை விடுவித்துள்ள ஹமாஸ்!

உயிரிழந்த மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் திருப்பி அனுப்பியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது.

உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் IDF கூறியுள்ளது.

அந்த தகவலின்படி, செஞ்சிலுவைச் சங்கம் சவப்பெட்டிகளில் இருந்த உடல்களை மீட்டு செவ்வாய்க்கிழமை (14) இரவு இஸ்ரேலிய இராணுவத்திடம் ஒப்படைத்தது.

ஹமாஸ் இறந்த 28 பணயக்கைதிகளின் உடல்களையும் திருப்பி அனுப்பும் வரை காசாவிற்கு உதவி செய்வதை கட்டுப்படுத்துவதாக இஸ்ரேல் எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டது.

பாலஸ்தீன ஆயுதக் குழு திங்களன்று (13) 20 உயிருள்ள மற்றும் நான்கு இறந்த பணயக்கைதிகளை திருப்பி அனுப்பியது.

இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 45 பாலஸ்தீனியர்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை காசாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக செஞ்சிலுவைச் சங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திங்களன்று ஹமாஸால் விடுவிக்கப்பட்ட முதல் நான்கு பணயக்கைதிகள் டேனியல் பெரெட்ஸ் (வயது 22) யோசி ஷராபி (வயது 53) கை இல்லூஸ் (வயது 26) மற்றும் பிபின் ஜோஷி (வயது 23) ஆகியோர் என இஸ்ரேலால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் அலுவலகம், விடுவிக்கப்பட்ட அண்மைய நான்கு பணயக்கைதிகளை அடையாளம் காணும் செயல்முறை நடந்து வருவதாகக் தெரிவித்துள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments