Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்Breaking News -அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு

Breaking News -அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்தில் இன்று (4) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌ்ளை நிற கார் ஒன்றில் பிரவேசித்த சிலர் இன்று (4) காலை இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபர், 54 வயதுடைய நிலந்த வருஷ விதான என தெரியவந்துள்ளது. இவர், போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கரந்தெனிய சுத்தா என்பவரின் மைத்துனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், இவர் அம்பலாங்கொடை – மோதர தேவாலயத்தின் தலைவர் பதவியையும் வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பவம் தொடர்பில் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments