இந்தியத் திரையுலகின் முன்னணி நடன இயக்குனரும் இயக்குனருமான ஃபாரா கான், முதன்முறையாக ஒரு பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்கத் தயாராகிவிட்டார். ‘The 50’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் புகழ்பெற்ற ‘Les Cinquante’ தொடரின் இந்தியத் தழுவலான இது, வழக்கமான ரியாலிட்டி ஷோக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு அரண்மனை.. 50 பிரபலங்கள்.. விதிகளே இல்லாத ஆட்டம்!
இந்த நிகழ்ச்சி மும்பையின் மட் தீவில் (Madh Island) அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான அரண்மனை போன்ற அமைப்பில் படமாக்கப்பட்டுள்ளது.
இதில் சின்னத்திரை, சமூக வலைதளங்கள் மற்றும் யூடியூப் தளங்களில் புகழ்பெற்ற 50 பிரபலங்கள் ஒரே கூரையின் கீழ் தங்கியிருப்பார்கள்.
இந்த ஷோவின் சிறப்பம்சமே இதில் நிலையான விதிகள் எதுவுமே கிடையாது என்பதுதான். போட்டியாளர்களின் மன உறுதி, தந்திரங்கள், கூட்டணி மாற்றங்கள் மற்றும் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களே அவர்களை வெற்றியாளராக மாற்றும்.
இதுவரை உறுதியான 32 போட்டியாளர்கள்
மொத்தம் 50 போட்டியாளர்கள் பங்கேற்க உள்ள நிலையில், இதுவரை 32 பேரின் பெயர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. அதில் மிக முக்கியமான சில பெயர்கள் இதோ:
-
சின்னத்திரை நட்சத்திரங்கள்: கரண் படேல், ரிதி டோக்ரா, ஊர்வசி டோலக்கியா, சாஹத் பாண்டே, ஷைனி தோஷி.
-
பிக்பாஸ் பிரபலங்கள்: ஷிவ் தாக்கரே, அர்ச்சனா கௌதம், பிரின்ஸ் நருலா மற்றும் யுவிகா சௌத்ரி (தம்பதி), நிக்கி தம்போலி, திவ்யா அகர்வால்.
-
டிஜிட்டல் மற்றும் சமூக வலைதளப் பிரபலங்கள்: ஃபைசல் ஷேக் (Mr Faisu), லவ்கேஷ் கட்டாரியா, டிஜிவிஜய் சிங் ரதி, ரஜத் தலால், மேக்ஸ்டெர்ன் (சாகர் தாக்கூர்).
-
மற்ற முக்கியப் பெயர்கள்: கிருஷ்ணா ஷெராஃப் (ஜாக்கி ஷெராஃப்பின் மகள்), மோனாலிசா மற்றும் விக்ராந்த் சிங் ராஜ்புத் (போஜ்புரி நட்சத்திரங்கள்), ஸ்ருதிகா அர்ஜுன் (குக் வித் கோமாளி புகழ்).
எப்போது, எங்கு பார்க்கலாம்?
Banijay Asia நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, பிப்ரவரி 1 முதல் JioHotstar ஓடிடி தளத்திலும், Colors TV தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக உள்ளது. ஓடிடியில் இரவு 9 மணிக்கும், தொலைக்காட்சியில் இரவு 10:30 மணிக்கும் இந்த நிகழ்ச்சியைக் காணலாம். சுமார் 50 எபிசோடுகளைக் கொண்ட இந்தத் தொடர், இந்திய ரியாலிட்டி ஷோக்களின் வரலாற்றையே மாற்றியமைக்கும் என ஃபாரா கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


