கண்டி – உடதும்பர பகுதியில் இன்று மாலை நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோளில் குறித்த நிலநடுக்கம் 2.2 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடதும்பர – தேவஹந்தியா கிராமத்தில் இன்று மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுவொரு சிறிய நிலநடுக்கம் என்பதால் பொதுமக்கள் தேவையற்ற பீதி அடைய வேண்டாம் என்று புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.


