டென்மார்க் அரசு, தனது ஓய்வூதிய வயதை 70 ஆக உயர்த்தும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் டென்மார்க், ஐரோப்பாவில் ஓய்வூதிய வயதை 70-க்கு உயர்த்தும் முதல் நாடாக மாறியுள்ளது.
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த சட்டத்திற்கு 81 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 21 பேர் எதிராகவும் வாக்களித்தனர். புதிய சட்டம் 1970 டிசம்பர் 31க்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
தற்போதைய ஓய்வூதிய வயது சுமார் 67 ஆக இருந்தாலும், 1967 ஜனவரி 1 பிறந்தவர்களுக்கு அது 69 வரை உயரக்கூடியதாகும். இந்த உயர்வு, எதிர்கால சந்ததிகளுக்கு நிலையான சமூக நலன்கள் வழங்கும் நோக்கில் அமல்படுத்தப்படுகிறது என ஊதிய அமைச்சர் அண்ணே ஹால்ஸ்போ ஜோர்ஜன்சென் தெரிவித்துள்ளார்.
வயது அடிப்படையிலான மக்கள் விநியோகம்:
டென்மார்க் நாட்டில் 60–69 வயதினரானவர்கள் சுமார் 7.13 லட்சம் பேர் உள்ளனர். அதேசமயம், 70–79 வயதினர்கள் 5.80 லட்சமாக உள்ளனர். தற்போது 80,000க்கும் மேற்பட்டோர் ஓய்வூதிய வயதுக்கு மேல் இருந்தும் பணியாற்றி வருகின்றனர். இது நல்வாழ்வு நிலை, பணியாளர் உரிமைகள் மற்றும் நிதி ஊக்குவிப்புகள் காரணமாக ஏற்பட்டுள்ளது என்று F&P அமைப்பு தெரிவித்துள்ளது.
F&P இயக்குநர் ஜான் வி. ஹான்சன், “இந்த உயர்வு சிலருக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், மக்கள் நீண்ட காலம் பணியாற்றும் போக்கே அதிகமாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ஓய்வூதிய வயது நிலவரம்
டென்மார்க் ஐரோப்பாவில் முதன்முறையாக ஓய்வூதிய வயதை 70-க்கு மேல் உயர்த்தும் நாடாக மாறுகிறது. இதனால், உலகளவில் லிபியாவுடன் இணையான நிலையை பெற்றுக் கொள்கிறது.
பிரான்சில், கடந்த மார்ச் மாதம் 64 வயதிற்கு ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கு எதிராக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வீதியில் பேரணி செய்தனர்.
செப்டம்பரில், சீன அரசு ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, அதில் ஆண்களின் ஓய்வுபெறும் வயது 60 இருந்து 63 ஆக உயர்த்தப்படுகிறது. பெண்களின் தொழில்களுக்கு ஏற்ப 50 மற்றும் 55 ஆக இருந்த ஓய்வுபெறும் வயது, 55 மற்றும் 58 ஆக உயர்த்தப்பட்டது.
இங்கிலாந்தில் 2026 முதல் 2028 வரை ஓய்வூதிய வயது 67 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது, மேலும் 68 ஆக உயர்த்தும் ஆய்வும் நடந்து வருகிறது.
அமெரிக்காவில் ஓய்வு பெறும் வயது, ஐக்கிய இராச்சியத்தின் ஓய்வுவயதுக்கு சமானமாகவே இருக்கிறது. இருப்பினும், சில சமூக பாதுகாப்பு நலன்கள் 62வது வயதிலிருந்தே கிடைக்கத் தொடங்குகின்றன.
உலகம் முழுவதும் வாழ்நாள் நீடித்தும், பொருளாதார சவால்களும் ஓய்வூதிய வயதை உயர்த்தும் ஒரு கட்டாய நிலையை உருவாக்கி வருகின்றன. டென்மார்க் இந்த மாற்றத்தில் முன்னணி நாடாக மாறி, எதிர்கால சந்ததிகளுக்கான நலத்தைக் கண்காணிக்கும் நோக்கில் 70 வயதுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தியுள்ளது. இது ஒரு உலகளாவிய போக்காகவே உருவாகி வருகிறது, மக்கள் நீண்ட காலம் பணியாற்ற வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.