ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு ராணுவத்தில் கவுரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.
துணை ராணுவத்தின் லெப்டினன்ட் கர்னல் பதவி அளித்து நீரஜ் சோப்ராவை மத்திய அரசு கவுரவித்துள்ளது
ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக நீரஜ் சோப்ரா பதவியேற்றார் ஜனாதிபதி முர்மு கவுரவ பதவியை வழங்கினார். ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதற்கு முன்பு அவர் இந்திய ராணுவத்தில் சுபேதாராக இருந்தார்.