நடப்பாண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளதுடன் 96,228 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மட்டும் 737 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். ஜூலை மாதத்தில் அதிகபட்சமாக 29,964 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
இதனையடுத்து ஜூன் மாதத்தில் 21,533 பேரும், ஓகஸ்ட் மாதத்தில் 10,155 பேரும், மே மாதத்தில் 8,590 பேரும், ஜனவரி மாதத்தில் 7,866 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாகாண ரீதியில் மேற்கு மாகாணமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 50,851 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், இது மொத்த நோயாளிகளில் 52.84 சதவீதமாகும்.
மேலும், தென் மாகாணத்தில் 13,950 பேரும், மத்திய மாகாணத்தில் 8,818 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 7,925 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


