மாகாண சபைத் தேர்தலைப் பழைய முறையில் உடனடியாக நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தினார்.
கொழும்பு, எதுல்கோட்டேயிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், மேலும் குறிப்பிடுகையில்,
நீதிமன்றங்களில் வழக்குத் தேக்கத்தைக் குறைப்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைக்கலாம். தனிநபர்களை மையமாகக் கொண்ட அரசமைப்புத் திருத்தங்களுக்கு மக்கள் தீர்ப்பு (சர்வசன வாக்கெடுப்பு) காணப்பட வேண்டும். மேலும்இ நீதியரசர்களின் 8 வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் குறுக்கு வழியில் செல்வது தவறான முன்னுதாரணம். என்றார்.


