மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி, கணிசமாக அதிகரித்துள்ளதால், அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவல் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
டெங்கு முகாமைத்துவ நிபுணர் குழு உறுப்பினர், விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய டெங்கு பரவல் நிலைமை, 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான டெங்கு பரவலை விடவும் மோசமானதாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மேல் மாகாண மருத்துவமனைகளின் கொள்ளளவு முழுமையாக நிரம்பியுள்ளதாகவும், சில மருத்துவமனைகளில் ஒரே கட்டிலில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


