Saturday, July 11, 2026
spot_img
Homeகனடா செய்திகள்கனடாவில் பெண் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

கனடாவில் பெண் ஒருவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கடந்த மே மாதம் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 5 மில்லியன் டாலர் வென்றுள்ளார்.

ஆல்பர்ட்டாவின் லீகல் பகுதியைச் சேர்ந்த ஷானன் கீஸ்ட் என்ற பெண், மே 27 அன்று நடைபெற்ற ‘லோட்டோ 6/49 கிளாசிக் ஜாக்பாட்’ (Lotto 6/49 Classic jackpot) குலுக்கலில் 5, 27, 35, 38, 44 மற்றும் 46 ஆகிய எண்களைக் கொண்ட லாட்டரி சீட்டை கொள்வனவு செய்திருந்தார். அந்த எண்களுக்கே தற்போது ஜாக்பாட் அடித்துள்ளது.

இது குறித்து ஷானன் கீஸ்ட் கூறுகையில், “கடையில் வைத்து எனது லாட்டரி சீட்டை ஸ்கேன் செய்தபோது, நான் தான் வென்றேன் என்பதை உடனடியாக என்னால் நம்ப முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

ஒரு வித்தியாசமான சத்தம் மட்டுமே கேட்டது. உடனே பதற்றத்திலும் மகிழ்ச்சியிலும் கண்ணீருடன் எனது கணவருக்கு ஃபேஸ்டைம் மூலம் வீடியோ கால் செய்ய முயன்றேன்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பரிசுப் பணத்தைக் கொண்டு சாஸ்காச்சுவான் பகுதியில் ஒரு அழகான மர இல்லம் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் ஒரு திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக கோஸ்டாரிகா நாட்டிற்குச் சிறப்புப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இது இன்னும் ஒரு கனவு போலவும், அதே சமயம் மகிழ்ச்சியில் என்ன செய்வதென்று தெரியாதவாறும் உள்ளது. எங்கள் வாழ்க்கையின் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று,” என்று கீஸ்ட் மேலும் கூறினார். இவர் இந்த அதிர்ஷ்டகரமான லாட்டரி சீட்டை மொரின்வில் பகுதியில் உள்ள ஒரு மொபில் எரிபொருள் நிலைய கடையிலிருந்து வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments