Saturday, July 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

தம்புத்தேகம, தலாவ மற்றும் கல்நேவ ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் 91,810 மக்களுக்கு நன்மையளிக்கும் தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நேற்று (10) பிற்பகல் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டது.

சீன அபிவிருத்தி வங்கி (CDB) வழங்கிய சலுகைக் கடனின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், 2022 மே மாதம் முதல் 2024 மே மாதம் வரையிலான காலப்பகுதியில் கடன் மறுசீரமைப்பு செயல்முறை காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த போதிலும், இதன் தேசிய முக்கியத்துவம் கருதி, இலங்கை அரசாங்கத்தின் நிதியையும் பயன்படுத்தி, தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இத்திட்டத்தின் பணிகள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இப்பகுதியில் வேகமாக பரவி வரும் நாட்பட்ட சிறுநீரக நோய்க்கு ஒரு தீர்வாக நிர்மாணிக்கப்பட்ட இந்த நீர் வழங்கல் திட்டம், இப்பகுதி மக்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் பங்களிப்பு செய்யும்.

இதன் மூலம் 25,000 வீடுகளுக்கு புதிய நீர் இணைப்புகளை வழங்குவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது.

32 பில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இத்திட்டம், நாளொன்றுக்கு 18,000 கன மீட்டர் திறன் கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், தலா 1,500 கன மீட்டர் திறன் கொண்ட 03 நீர் தாங்கிகள், 12.75 கிலோமீட்டர் நீளமுள்ள நீரைக் கொண்டு செல்லும் குழாய்க் கட்டமைப்பு மற்றும் 158 கிலோமீட்டர் நீளமுள்ள நீர் விநியோகக் குழாய் கட்டமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments