பொது சுகாதார அதிகாரிகள் சுற்றி வளைத்து பெருந் தொகையான பெரிய வெங்காயம் அழித்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று(03) மதியம் நோர்வூட் பிரதேச சபை பிரிவில் உள்ள நோர்வூட் நகரில் இடம் பெற்றது.

இது குறித்து மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் கூறுகையில் ஹட்டன் பிரதேச புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழங்கிய தகவலின் படி நேற்று (03)மதியம் மஸ்கெலியா பொகவந்தலாவ நல்லதண்ணி நோர்வூட் சாமிமலை பொது சுகாதார அதிகாரிகள் நோர்வூட் நகரில் உள்ள மொத்த விற்பனை நிலையம் ஒன்றை பரிசோதனை மேற்கொண்ட போது அங்கு பாவனைக்கு உதவாத 20 கிலோ கிழக்கு பாவனைக்கு உதவாத 396 கிலோ வெங்காயம் பாவனைக்கு உதவாத வெள்ளைப் பூண்டு 08 கிலோ கைப்பற்ற பட்டு அழிக்க பட்டது வர்த்தக நிலைய உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து எதிர் வரும் 12 ம் திகதி ஹட்டன் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் ஆகும் படி பணித்துள்ளார்கள்.


