Monday, March 16, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்பேட் கேர்ள் படமே நான் தயாரிக்கும் கடைசி படம் - வெற்றி மாறனின் அதிரடி முடிவு

பேட் கேர்ள் படமே நான் தயாரிக்கும் கடைசி படம் – வெற்றி மாறனின் அதிரடி முடிவு

பிரபல இயக்குநர்களான வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து பேட் கேர்ள் திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரீ வெளியீடு நிகழ்ச்சி இன்று நடைப்பெற்றது அதில் வெற்றி மாறன் தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ் ரூட் பிலிம்ஸ் நிறுவனத்தை மூடப்போவதாக அறிவித்தார் அதில் அவர் கூறியதாவது ” தயாரிப்பாளரில் வேலை மிகவும் கடினமானது, இயக்குநரின் வேலை அதை ஒப்பிடும் போது ஜாலியாக இருக்கிறது. தயாரிப்பாளரின் பொறுப்பு மிகப்பெரியது. இதனால் நான் தயாரிக்கும் கடைசி திரைப்படமாக பேட் கேர்ள் இருக்கும். அத்துடன் கிராஸ் ரூட் நிறுவனத்தில் கடையை மூடுகிறோம்” என கூறினார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments