தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான உயர்மட்டக் குழு எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி பிரிட்டனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளது.
செப்டம்பர் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இடம்பெறும் இந்த விஜயத்தின் போது, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.


