பிரிக்ஸ் அமைப்பின் 18ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு எதிர்வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் இந்தியாவின் டெல்லியில் நடைபெறவுள்ளது.
நான்காவது முறையாக இந்தியா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில், பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் உலகளாவிய, பிராந்திய விவகாரங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளன.
மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


