Thursday, August 27, 2026
spot_img
Homeஉலக செய்திகள்நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்வு

நேபாள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்வு

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கால் நேபாளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 332 ஆக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

நேற்று (26) காலை ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் நேபாளத்தில் 1000க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

 

காணாமல் போனவர்களில் 100 பேர் சீன நாட்டவர்கள் என்பதை சீன வெளியுறவு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

 

இதற்கிடையில், திபெத்திலும் குறைந்தது 558 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர் மழை மற்றும் புவியியல் அமைப்பு காரணமாக மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக அமைந்துள்ளன என வெளிநாட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments