Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்துரோகக் கூட்டணி- தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள் – மு.க.ஸ்டாலின்

துரோகக் கூட்டணி- தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள் – மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலை விமர்சித்து இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக எடப்பாடி பழனிசாமியும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீண்டும் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நேற்று கூட்டணி அறிவித்துள்ள இரண்டு கட்சித் தலைவர்களே… இரண்டு சோதனைகளுக்கே அ.தி.மு.க.வை அடமானம் வைத்துள்ளவர்கள், அடுத்து தமிழ்நாட்டை அடமானம் வைக்கப் போகிறீர்களா? குறைந்தபட்ச செயல்திட்டம் என்று சொல்கிறீர்களே, அதில் மாநில உரிமைகள் – மொழியுரிமை – நீட் விலக்கு – தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்டவை இடம்பெறுமா? இந்தத் துரோகக் கூட்டணியை – தோல்விக் கூட்டணியைத் தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் நிராகரிப்பார்கள்! என்று கூறியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments