தாராபுரம் மற்றும் மதுராந்தகம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கமைய, இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஒக்டோபர் 9ஆம் திகதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் தொகுதியின் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சத்தியபாமா தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
அதேவேளை, மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேலும் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


