Monday, June 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்தமிழில் முதல் ஏஐ தொழில்நுட்ப இசை ஆல்பம்

தமிழில் முதல் ஏஐ தொழில்நுட்ப இசை ஆல்பம்

ஏஐ தொழில்நுட்பம் உலக அளவில் வேகமாக வளர்ந்து வருகிறது. பாலிவுட்டில் ஏஐ தொழில்நுட்பத்தில் யாரும் நடிக்காமல் ஒரு திரைப்படமே உருவாகி உள்ளது. தமிழில் முதன் முறையாக ஒரு இசை ஆல்பம் உருவாகி உள்ளது.

‘வல்ல தேசம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் என்.டி. நந்தா இந்த இசை ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் என பன்முக திறமை கொண்ட இவர் இப்போது, இசையமைப்பாளராகவும் களமிறங்கி உள்ளார்.

லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் கல்லூரி மற்றும் பல முக்கிய தயாரிப்பு நிறுவனங்களில் திரைப்படத் தயாரிப்பு, சவுண்ட் என்ஜினியரிங், மற்றும் மியூசிக் டெக்னாலஜி ஏஐ ஆகிய துறைகளில் கல்வி பயின்றுள்ளார்.

தற்போது முழுக்க முழுக்க எந்த ஒரு பங்கேற்பாளரும் இல்லாமல், தானே இசையமைத்து, பாடல் எழுதி ஏஐ மூலம் விஷுவல்களை உருவாக்கி, இந்த புதிய வீடியோ ஆல்பம் பாடலை உருவாக்கி உள்ளார்.

“என் உயிரின் ஓசை நீயே” எனும் இப்பாடல் ஒரு பெண்ணின் பார்வையில் காதலின் ஏக்கத்தை, வலியை சொல்கிறது. இப்பாடல் சில மாற்றங்களுடன் ஆங்கில வடிவிலும் உருவாகியுள்ளது. தமிழ்ப்பாடலை, சீர்காழி சிற்பி எழுதியுள்ளார். தற்போது, நந்தா, “120 ஹவர்ஸ்” எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படவிருக்கிறது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments