உலகக் கிண்ண கால்பந்து தொடரில் மொரோக்கோ அணி காலிறுதிக்குத் தகுதி பெற்றது.
16 அணிகளின் சுற்று நேற்று ஆரம்பமானது.
முதல் போட்டியாக கனடா அணியுடன் நடந்த ஆட்டத்தில் மொரோக்கோ அணி 3-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
மொரோக்கோ அணி சார்பில் அஸடின் ஒனாசி, ஆட்டத்தின் 50 மற்றும் 82 ஆவது நிமிடங்களில் கோல்களை அடித்தார்.
சொவ்பினே ரஹிமி 90+8 ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார்.
ஆட்டநேரம் முடியும்வரை கனடா அணி எந்தவொரு கோலையும் பதிவு செய்யவில்லை.
இதனால் 3-0 என மொரோக்கோ அணி வெற்றிபெற்றது.


