கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு
கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் பணிகளில் இன்று (11) முற்பகல் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் முடக்கம் காரணமாகவே இவ்வாறு கடவுச்சீட்டு விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணினி அமைப்பை விரைவில் வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அத்திணைக்களத்தின் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டுத் தலைவர் சமிந்த பத்திராஜ தெரிவித்தார்.


