Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இன்றைய வானிலை

இன்றைய வானிலை

இலங்கைக்கு வடக்கே நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் படிப்படியாகப் பலவீனமடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், இத்தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், மழையுடனான வானிலையும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்று (17) காலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். இப்பிரதேசங்களில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அனுராதபுரம் மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments