Sunday, June 7, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்நெதர்லாந்தில் சோழர் கால செப்பேடுகள் மீட்பு குறித்து மோடி நெகிழ்ச்சி!

நெதர்லாந்தில் சோழர் கால செப்பேடுகள் மீட்பு குறித்து மோடி நெகிழ்ச்சி!

நெதர்லாந்து நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சோழர் கால செப்பேடுகள் மீண்டும் இந்தியாவிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் பெருமிதமான தருணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெதர்லாந்தில் நடைபெற்ற இது தொடர்பான விசேட விழாவில், அந்த நாட்டின் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் (X) இந்த மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பிரதமர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!

 

11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.

 

சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை  முறைப்படுத்தியதை  குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

 

நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments