Tuesday, July 21, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில்

நச்சு விதைகளை உட்கொண்ட 22 மாணவர்கள் வைத்தியசாலையில்

திருகோணமலை, கந்தளாய் பகுதியில் ஒருவகை நச்சு விதையை உட்கொண்டமையால் சுகவீனமடைந்த பாடசாலை மாணவர்கள் 22 பேர் வைத்தியசாயில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 06 இல் கல்வி பயிலும் 22 மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுகவீனமடைந்த மாணவர்களில் 20 ஆண் பிள்ளைகளும் 2 பெண் பிள்ளைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆமணக்கு விதையை குறித்த மாணவர்கள் உட்கொண்டிருக்கலாம் எனவும் ஆரம்பக்கட்ட சிகிச்சைகளின் பின்னர் குறித்த 22 மாணவர்களையும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கந்தளாய் வைத்தியசாலையின் மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments