கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களை நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 28 ஆம் திகதி கட்டான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நபர் ஒருவரைத் தாக்கிக் கொலை செய்த சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை தொடர்பில் நீர்கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது, விசாரணை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, குறித்த கொலையைச் செய்ததாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர் மற்றும் அக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஏனைய இரு சந்தேக நபர்களும் நேற்று (29) கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23, 47 மற்றும் 49 வயதுடைய கதிரான, ஏத்துகால மற்றும் கொச்சிக்கடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கட்டான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


